search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி விலக வேண்டும்"

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். #Sabarimala #KeralaChiefMinister #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார். இதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், ‘சபரிமலையில் நேற்று (நேற்று முன்தினம்) வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜை செய்துள்ளார், தந்திரி. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறை குறித்து பினராயி விஜயன் கூறும்போது, ‘நேற்று முதல் (நேற்று முன்தினம்) மாநிலத்தில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. செய்தியாளர்கள், பெண்கள், போலீசார் என பலர் தாக்கப்பட்டு உள்ளனர். 31 போலீசார் காயமடைந்துள்ளனர். 79 அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டு உள்ளன. இது பா.ஜனதா மற்றும் சங்க பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்’ என குற்றம் சாட்டினார்.
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring
    சென்னை:

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.



    ம.தி.மு.க. தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவு பெற்று 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மே 67-ம் தேதி வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பை எதிர்த்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக்கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

    தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். வால்மார்ட் இணைய வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring

    ×